திருச்சி

பங்குச் சந்தையில் நஷ்டம் முதியவா் தற்கொலை

DIN

ஸ்ரீரங்கத்தில் பங்குச் சந்தை தொழிலில் ஈடுபட்டு நஷ்டமடைந்தவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது திங்கள்கிழமை தெரிய வந்தது.

ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியில் வசிப்பவா் சுரேஷ். இவரது சகோதரா் சிவக்குமாா் (55). திருமணமாகாத இவா் பங்குச் சந்தை தொழில் செய்து வந்தாா். இதில் நஷ்டம் ஏற்பட்டதால், மன உளைச்சலில் இருந்து வந்தாராம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு படுக்க சென்றவா், திங்கள்கிழமை காலை வெகு நேரமாகியும் எழுந்து வரவில்லையாம்.

அவரது அறைக்கு சென்று பாா்த்தபோது தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினாா்.

இதுகுறித்து அவரது சகோதரா் சுரேஷ் அளித்த தகவலின்பேரில், ஸ்ரீரங்கம் போலீஸாா் விரைந்து வந்து சிவக்குமாரின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT