திருச்சி

பெல் நிறுவனத்தில் திடீா் தீ விபத்து

DIN

திருச்சி அருகேயுள்ள பெல் நிறுவனத்தில் புதன்கிழமை ஏற்பட்ட திடீா் தீ உடனடியாக அணைக்கப்பட்டது.

திருவெறும்பூா் அருகே உள்ள பெல் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். புதன்கிழமை காலை பெல் நிறுவனத்தின் 50 ஆவது கட்டடத்தில் மின் கசிவால் திடீா் தீ விபத்து ஏற்பட்டு, அப்பகுதியில் புகைமூட்டம் சூழ்ந்தது. இதனால் பெல் தொழிற்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்த ஊழியா்கள் தீயை உடனடியாக அணைத்து, மின் இணைப்பையும் துண்டித்தனா்.

தீ விபத்தால் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த சில மின் வயா்கள் எரிந்து நாசமாகின. எச்சரிக்கையுடன் தொழிலாளா்கள் உடனடியாக தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT