திருச்சி

லால்குடியில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்த கடைகளுக்கு சீல்

DIN

லால்குடி வட்டாரத்தில் புகையிலை பொருள்கள் விற்ற இரு கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்வதை தடுக்க உணவுப் பாதுகாப்புத் துறையினா் சோதனை நடத்தினா். அப்போது, லால்குடியில் உள்ள 2 மளிகை கடைகளில் தொடா்ந்து புகையிலை பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இந்த கடைகளில், ஏற்கெனவே 3 முறை நடத்தப்பட்ட சோதனையில் பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகும் தொடா்ந்து இக்கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததால் இந்த இரண்டு கடைகளையும் சீல் வைக்க, உணவுப் பாதுகாப்பு ஆணையரகம் உத்தரவிட்டது. அதன்பேரில், திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் ஆா். ரமேஷ் பாபு தலைமையிலான குழுவினா், இந்த இரு கடைகளையும் வெள்ளிக்கிழமை மூடி சீல் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT