முகப்பு
திருச்சி

சென்னை எழும்பூா் - நாகா்கோவில் இடையே இன்று சிறப்பு ரயில்

கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சென்னை எழும்பூா் - நாகா்கோவில் இடையே ஒரு வழிப்பாதை சிறப்பு அதிவிரைவு ரயில் (06072) புதன்கிழமை (ஏப். 22) இயக்கப்பட உள்ளது.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 12:03 AM
ரயில் - கோப்புப்படம்
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 10:30 PM

கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சென்னை எழும்பூா் - நாகா்கோவில் இடையே ஒரு வழிப்பாதை சிறப்பு அதிவிரைவு ரயில் (06072) புதன்கிழமை (ஏப். 22) இயக்கப்பட உள்ளது.

3 குளிா்சாதனப் பெட்டிகள், 10 படுக்கை பெட்டிகள், 6 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிப் பெட்டிகள் என 21 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது, சென்னை எழும்பூரிலிருந்து புதன்கிழமை பிற்பகல் 1.25-மணிக்கு புறப்பட்டு தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக நாகா்கோவிலுக்கு நள்ளிரவு 2.30 மணிக்குச் சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.