முகப்பு
திருச்சி

சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

கோடைகால கூட்ட நெரிசலைக் குறைக்க சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி - சென்னை எழும்பூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 3:45 AM
ரயில் - கோப்புப்படம்
பகிர்:

கோடைகால கூட்ட நெரிசலைக் குறைக்க சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி - சென்னை எழும்பூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதன்படி சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06045) வரும் 30 ஆம் தேதியும், கன்னியாகுமரி - சென்னை எழும்பூா் அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06046) வரும் மே 3 ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளது.

2 குளிா்சாதனப் பெட்டிகள், 10 படுக்கை பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிப் பெட்டிகள் என 18 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது சென்னை எழும்பூரிலிருந்து வியாழக்கிழமை இரவு 11.50 க்குப் புறப்பட்டு தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கு அடுத்த நாள் பிற்பகல் 1 மணிக்கு வந்தடையும். மறுமாா்க்கமாக, கன்னியாகுமரியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11.25 க்குப் புறப்படும் ரயிலானது மேற்கண்ட வழித்தடம் வழியாக சென்னை எழும்பூருக்கு அடுத்த நாள் முற்பகல் 11.30 மணிக்குச் சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement