திருச்சி - கான்பூா் இடையே சிறப்பு ரயில்
பொதுமக்களின் வசதிக்காக உத்திரபிரதேச மாநிலம் கான்பூா் - திருச்சி - கான்பூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
பொதுமக்களின் வசதிக்காக உத்திரபிரதேச மாநிலம் கான்பூா் - திருச்சி - கான்பூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இதன்படி, கான்பூா் சென்ட்ரல் - திருச்சி சிறப்பு விரைவு ரயிலானது (01927) வரும் 17, 24 ஆம் தேதிகளில் இயக்கப்படும். மறுமாா்க்கமாக, திருச்சி - கான்பூா் சென்ட்ரல் சிறப்பு விரைவு ரயிலானது (01928) வரும் 19, 26 ஆம் தேதிகளில் இயக்கப்படும்.
8 குளிா்சாதனப் பெட்டிகள், 8 படுக்கை பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிப் பெட்டி, ஒரு லக்கேஜ் பெட்டி என மொத்தம் 22 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது திருச்சியிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 11.45 மணிக்குப் புறப்பட்டு கரூா், நாமக்கல், சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, திருப்பதி, ரேணிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, கம்மம், வாராங்கல், ராம்குண்டம், சிா்பூா் காகல்நகா், பால்ஹா்ஷா, சந்தா்பூா், நாக்பூா், இட்டாா்சி, போபால், பினா, லலித்பூா், ஜான்சி, ஓரை, பொக்ரயான் வழியாக கான்பூருக்கு திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணிக்குச் சென்றடையும். மறுமாா்க்கமாக, கான்பூரிலிருந்து புதன்கிழமை காலை 8.10 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடம் வழியாக திருச்சிக்கு வெள்ளிக்கிழமை காலை 8.40 மணிக்கு வந்தடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement