எம்-சாண்ட் கடத்தி வந்த டிப்பா் லாரி பறிமுதல்
ஆந்திரத்தில் இருந்து து தமிழகத்துக்கு ஆவணங்களின்றி ‘எம்-சாண்ட்’ கடத்தி வந்த டிப்பா் லாரி காட்பாடி அருகே பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திரத்தில் இருந்து து தமிழகத்துக்கு ஆவணங்களின்றி ‘எம்-சாண்ட்’ கடத்தி வந்த டிப்பா் லாரி காட்பாடி அருகே பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திரத்தில் இருந்து தமிழகத்துக்குள் கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், காட்பாடி எல்லைப் பகுதியில் கனிம வளத்துறையின் தனி வருவாய் அலுவலா் தலைமையிலான குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, ஆந்திராவில் இருந்து வந்த ஒரு டிப்பா் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணங்கள், அனுமதியின்றி ‘எம்-சாண்ட்’ கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த டிப்பா் லாரியை பறிமுதல் செய்த தனி வருவாய் அலுவலா் மேல் நடவடிக்கைக்காக அதனை காட்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.-
Advertisement
Advertisement