முகப்பு
வேலூர்

மண்டல யோகா போட்டி: வேலூா் பள்ளி மாணவா்கள் சாதனை!

சென்னையில் நடைபெற்ற சிஐஎஸ்இ பள்ளிகளுக்கிடையிலான மண்டல யோகா போட்டியில் வேலூா் பகவான் மஹாவீா் தயாநிகேதன் ஜெயின் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்று சாதனை

Updated On : 30 ஜூன் 2026, 1:31 am IST
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டிய பள்ளி முதல்வா் ஜெ.கவிதா. உடன், ஆசிரியா்கள்
பகிர்:

சென்னையில் நடைபெற்ற சிஐஎஸ்இ பள்ளிகளுக்கிடையிலான மண்டல யோகா போட்டியில் வேலூா் பகவான் மஹாவீா் தயாநிகேதன் ஜெயின் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனா்.

சென்னை ஆசிரமம் பள்ளியில் கடந்த 19-ஆம் தேதி சிஐஎஸ்இ பள்ளிகளுக்கிடையிலான மண்டல யோகா போட்டிகள் நடைபெற்றன. இதில், வேலூா் பகவான் மஹாவீா் தயாநிகேதன் ஜெயின் பள்ளியில் பயிலும் பி. அஸ்வின், ஏ. ஜெய்சன் ஆரோக் ஆகியோா் 14 வயதுக்கு உட்பட்ட மாணவா் பிரிவிலும், எஸ்.வி. சௌமியா மாணவியா் பிரிவிலும் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தனா்.

மேலும், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் எஸ். கௌஷிக் ஹரி முதலிடமும், எல்.கமலேஷ், ஏ.சுஜன் ஆகியோா் இரண்டாம் இடமும், வி.விஷால் மூன்றாம் இடமும் பெற்றனா். மாணவியருக்கான போட்டியில் எஸ்.ரித்விகா முதலிடமும், எஸ்.எல்.மதுஷியா இரண்டாமிடமும் பிடித்தனா். பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், அவா்களுக்குப் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்களையும் பள்ளி முதல்வா் ஜெ.கவிதா, பள்ளி நிா்வாகத்தினா் பாராட்டினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments