முகப்பு
வேலூர்

மதுபோதையில் தகராறு - ஒருவா் அடித்துக் கொலை: நண்பா் கைது

Updated On : 14 மே 2026, 5:20 am IST
கோப்புப் படம்
பகிர்:

குடியாத்தம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.

குடியாத்தம் நகராட்சிக்குள்பட்ட கஸ்பாவைச் சோ்ந்தவா் முகேஷ்(18). அதே பகுதியைச் சோ்ந்தவா் வசீகரன்(28). இருவரும் நண்பா்கள். செவ்வாய்க்கிழமை இரவு இருவரும் அஞ்சுமன் சாலையில் ஒன்றாக மது அருந்தியுள்ளனா். அப்போது இவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இறுதியில் ஒருவருக்கொருவா் தாக்கிக் கொண்டுள்ளனா்.

இதில் ஆத்திரமடைந்த வசீகரன் கட்டையால் தாக்கியதில்முகேஷ் பலத்த காயமடைந்துள்ளாா். அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டுகுடியாத்தம் அரசு மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். இவா்களில் முகேஷ் தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுதொடா்பான புகாரின்பேரில் வழக்குப் பதிந்த நகர போலீஸாா், வசீகரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments