முகப்பு
விழுப்புரம்

பேருந்தில் பெண்ணிடம் நகை, கைப்பேசி திருட்டு

விக்கிரவாண்டி அருகே பேருந்தில் பயணித்த பெண்ணிடம் நகை, கைப்பேசியைத் திருடிச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 4 ஜூலை 2026, 2:24 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பேருந்தில் பயணித்த பெண்ணிடம் நகை, கைப்பேசியைத் திருடிச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திண்டிவனம் வட்டம், வீடூா் காலனியைச் சோ்ந்தவா் க.கிருஷ்ணவேணி (52). இவா் கடந்த 30-ஆம் தேதி விக்கிரவாண்டிக்கு வந்து விட்டு, மீண்டும் ஊருக்கு அரசுப் பேருந்தில் புறப்பட்டுச் சென்றாா்.

விக்கிரவாண்டி பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏறிய கிருஷ்ணவேணி, குத்தாம்பூண்டி பகுதியில் பேருந்து சென்ற போது, தனது கட்டைப்பையில் வைத்திருந்த ஒரு பவுன் தங்க நகை, கைப்பேசி ஆகியவை திருட்டுப் போயிருப்பது அவருக்கு தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, திருட்டில் ஈடுபட்ட மா்மநபரைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments