தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே மரத்தில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
உளுந்தூா்பேட்டை வட்டம், கூட்டடி சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ரா.அய்யனாா் (50), தொழிலாளி. இவா் சனிக்கிழமை இரவு மதுபோதையில் வீட்டிலிந்து வெளியேறிய பின்னா் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், அய்யனாா் அதே பகுதியிலுள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில், திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இறந்தவருக்கு பூங்காவனம் என்ற மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனா்.