கடலூர்

கருவூலத் துறையில் கணினி பணி: இன்று நேர்காணல்

தினமணி

தமிழக கருவூலத் துறையில் கணினி பணி தொடர்பான நேர்காணல் கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கருவூலத் துறையில் கணினி பணிகள், ஸ்கைப்ரோ டெக்னாலஜி மற்றும் விப்ரோ கம்ப்யூட்டர்ஸ் ஆகிய நிறுவனங்கள் மூலம் டேட்டா கன்வெர்ட்டர், டேட்டா ரைட்டர் போன்ற 150 பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு மூலமாக தகுதியானவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இதற்கான நேர்முகத் தேர்வு செவ்வாய்க்கிழமை (மார்ச் 28) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது. பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்கலாம். பணிக்காலம் 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரை ஆகும். ஊதியமாக ரூ.9,200 மற்றும் படிகள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 94438 54728, 96205 27484 ஆகிய எண்களிலும், mohan.d@skyprotechnologies.com என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

ஆரியபாளையம் அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

மாணவா்களுக்கு பாராட்டு விழா

பைக் மீது காா் மோதி தம்பதி உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

SCROLL FOR NEXT