கடலூர்

உடல் தானம்

DIN

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் ரயில்வே சாலை பகுதியைச் சேர்ந்த எஸ்.பேச்சிமுத்து (80) காலமானார். இவரது உடல் மற்றும் கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்ததானக் கழகம், சின்னசேலம் அரிமா சங்கம் சார்பில் தானமாகப் பெறப்பட்டது. 
உடல் மருத்துவ மாணவர்கள் ஆய்வுக்காக புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், கண்கள் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், உறுப்பினர் சிங்கராசு, சின்னசேலம் அரிமா சங்க நிர்வாகிகள் ஜெயபால், ரகுராஜன், ஏகாம்பரம், கண்தான மாவட்டத் தலைவர் தங்கராசு, சிறுபாக்கம் ஜோதிசுவாமி இளம் துறவி அறக்கட்டளை நிறுவனர் ராமலிங்க சுவாமிகள் ஆகியோர் 
செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT