கடலூர்

செப்.19-இல் முதுநிலை ஆசிரியர் நியமன கலந்தாய்வு

தினமணி

முதுநிலை ஆசிரியர் பணியிட நியமனத்துக்கான கலந்தாய்வு வருகிற 19-ஆம் தேதி நடைபெறுகிறது.
 இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.முருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருகிற 19-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கடலூர் மஞ்சக்குப்பத்திலுள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நியமன கலந்தாய்வு நடைபெறுகிறது.
 எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அன்று காலை 9.30 மணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான ஆணை, அனைத்து அசல் கல்விச் சான்றுகள், சாதிச் சான்று மற்றும் இதர சான்றுகளுடன் நேரில் ஆஜராக வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT