தீத் தொண்டு நாள் விழா
நெல்லிக்குப்பம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சார்பில், பெரியசோழவல்லி கிராமத்தில் தீ தொண்டு நாள் விழா (படம்) திங்கள்கிழமை நடைபெற்றது.
நெல்லிக்குப்பம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சார்பில், பெரியசோழவல்லி கிராமத்தில் தீ தொண்டு நாள் விழா (படம்) திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், ஒவ்வோர் ஆண்டும் ஏப்.14 முதல் 20-ஆம் தேதி வரை ஒரு வார காலம் தீ தொண்டு நாள் விழா நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு விபத்துகளில் மீட்புப் பணியின்போது உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதன்படி, நெல்லிக்குப்பம் அடுத்துள்ள பெரியசோழவல்லி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, முன்னாள் கவுன்சிலர் செ.புலிக்கொடியன் தலைமை வகித்தார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குநர் சகா.பிரசாத் வரவேற்றார். முன்னணி தீயணைப்போர் என்.செல்வம் முன்னிலை வகித்தார். கே.எஸ்.விஜயன், எம்.ஆறுமுகம், பி.அழகு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் தே.வீரபாகு சிறப்புரையாற்றினார். தீயணைப்பு வீரர்கள் விபத்து தடுப்பு குறித்து செயல் விளக்கம் அளித்தனர். சு.சாமிநாதன் நன்றி கூறினார்.