ஜூலை 29-இல் சிதம்பரத்தில் 10-ஆவது திருப்புகழ் மாநாடு
சிதம்பரத்தில் 10-ஆவது திருப்புகழ் மாநாடு வருகிற 29-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கீழப்புதுத்தெரு வேதபாராயண மடத்தில் நடைபெறுகிறது.
சிதம்பரத்தில் 10-ஆவது திருப்புகழ் மாநாடு வருகிற 29-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கீழப்புதுத்தெரு வேதபாராயண மடத்தில் நடைபெறுகிறது.
மாநாட்டுக்கு என்.கோவிந்தராஜன் தலைமை வகிக்கிறார். வி.சந்திரசேகர் வரவேற்கிறார். பேராசிரியர் தி.பொன்னம்பலம், கனகசபை மேலும் எனது குருநாதன் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
சீர்காழி சகோதரிகள் ஆர்.அருணா, ஆர்.அகிலா ஆகியோர் திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சியை வழங்குகின்றனர்.
திருப்புகழின் பெருமை குறித்து கே.அருள்பிரகாசம் சொற்பொழிவாற்றுகிறார். பேராசிரியர் மு.சிவச்சந்திரன், "திருப்புகழில் அறம்' என்ற தலைப்பிலும், த.அகரமுதல்வர் சுந்தர், "அலங்காரம்' என்ற தலைப்பிலும், "தமிழ்ப்பெருமாள்' என்ற தலைப்பில் ரா.அன்பழகன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
ஸ்ரீமௌனமட அதிபர் மௌனசுந்தரமூர்த்தி சுவாமிகள், விலங்கல்பட்டு முருகப்பா, பண்ருட்டி பி.டி.மாதவன் ஆகியோர் ஆசியுரை வழங்குகின்றனர். விலங்கல்பட்டு எஸ்.வைத்தியநாதசாமி, திருப்புகழ் மகளிர் மன்றக் குழுவினரின் திருப்புகழ் இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.
விழாவில் ஹைதராபாத் வி.கணேஷ், கடலூர் கே.கணேஷ், எஸ்.குமாரசாமி, கே.வைத்தியநாதன், பா.நடராஜன், அநுபூதி அறக்கட்டளை வி.முருகையன், என்.முருகன்பிள்ளை, எஸ்.செல்வமுத்துக்குமரன், எஸ்.ஆர்.ராமநாதன் செட்டியார், ராம.முத்துக்குமரேசன் ஆகியோர் வாழ்த்துரையாற்றுகின்றனர். டி.அனந்தபத்மநாபன் நன்றி கூறுகிறார்.
மாநாட்டுக்கான ஏற்பாடுகளை விலங்கல்பட்டு எஸ்.வைத்தியநாதசாமி,
ஜே.ராகவன் மற்றும் நிர்வாகிகள்
செய்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.