கடலூர்

முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்

தினமணி

கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர் நாள் கூட்டம், சுயதொழில் முனைவோருக்கான கருத்தரங்கு ஆகியவை மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்தில், பெறப்பட்ட 18 மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்திடுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும், முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள், பல்வேறு துறைகளின் மூலமாக கிடைக்கும் பலன்கள் குறித்தும் ஆட்சியர் விளக்கினார்.
 மேலும், பல்வேறு துறை அலுவலர்கள் தங்களது துறை மூலம் வழங்கப்படும் பயிற்சி மற்றும் சலுகைகள் குறித்து விளக்கினர். கூட்டத்தில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆண்ட்ரூ அய்யாசாமி, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் க.தெய்வசிகாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT