இமாம்ஸ் கவுன்சில் தெருமுனைக் கூட்டம்
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பில் மங்கலம்பேட்டையில், "வாருங்கள் ஒன்றிணைந்து தேசம் காப்போம்' என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பில் மங்கலம்பேட்டையில், "வாருங்கள் ஒன்றிணைந்து தேசம் காப்போம்' என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
அமைப்பின் மாவட்டச் செயலர் மவ்லவி முஹம்மது தையிப் தலைமை வகித்தார். ஐக்கிய ஜமாஅத் நகரத் தலைவர் அப்துல் பாரி, கீழவீதி பள்ளிவாசல் தலைவர் அப்துல் கனி, எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் அப்துல் காதர் ஹஸனி, மாவட்ட துணைத் தலைவர் முஹம்மது அப்துல் கனி, மாவட்ட பொருளாளர் அலி பாதுஷா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சமூக ஊடக மைய மாநில துணைச் செயலர் ராஜ்குமார், இந்திய குடியரசுக் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலர் மங்காப்பிள்ளை ஆகியோர் பேசினர்.
ஜமாஅத்துல் உலமா சபையின் விருத்தாசலம் வட்டார பொருளாளர் மவ்லவி.ஹபீப் முஹம்மது, பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் அன்வர், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்ட செயலர் இக்பால், கோவிலானூர் பங்குத் தந்தை ஆண்ட்ரூஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர இளைஞரணி செயலர் சுஜாவுதீன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, கவுன்சில் நகரத் தலைவர் மவ்லவி சிக்கந்தர்ராஜா வரவேற்க, நகரச் செயலர் முஹம்மது ஹனிப் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.