முகப்பு
கடலூர்

வரி ஆலோசகர்கள் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு வரி ஆலோசகர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் விருத்தாசலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 அக்டோபர் 2018, 9:20 am IST
பகிர்:

தமிழ்நாடு வரி ஆலோசகர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் விருத்தாசலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்துக்கு, தமிழ்நாடு பொருள் விற்பனை மற்றும் சேவை வரி சங்கத்தின் மாநிலத் தலைவர் முகமது அஸ்கர் தலைமை வகித்தார்.
 மாவட்டத் தலைவர் முருகானந்தம், நிர்வாகி பாபுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக துரைராஜ் கலந்துகொண்டு பேசினார்.
 கூட்டத்தில், ஜிஎஸ்டி வருடாந்திர ரிட்டன் தாக்கல் செய்வதில் விலக்கு அளிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், சென்னை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வரி ஆலோசகர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.