கடலூர்

தீ விபத்து: எம்எல்ஏ நிவாரணம்

தினமணி

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நெய்வேலி தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை திங்கள்கிழமை வழங்கினார்.
 குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வானதிராயபுரம் ஊராட்சி, தென்குத்து கிராமத்தில் சபாபதி, மணிகண்டன், பச்சையம்மாள், இந்திரா நகர் ஊராட்சி மாற்றுக் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி ஆகியோரது கூரை வீடுகள் தீ விபத்தில் எரிந்து சேதமடைந்தன.
 இதுகுறித்து தகவல் அறிந்த தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அரசு நிவாரண உதவிகள் மற்றும் தனிப்பட்ட முறையில் உதவிகளையும் வழங்கினார்.
 நிகழ்வின் போது, குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் விஜயா, வருவாய் ஆய்வாளர் கெüரி, கிராம நிர்வாக அலுவலர்கள் பார்த்தசாரதி, சந்திரவதனம், கடலூர் மேற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஞானமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் 2 கோடி கைப்பேசிகளுக்கு எச்சரிக்கைத் தகவல்கள்

இலவச கண் சிகிச்சை முகாம்...

தமிழகத்தில் குறைந்து வரும் வெப்பத்தின் தாக்கம்: மக்கள் நிம்மதி

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவா் கைது

மாவோயிஸ்டுகள் போல் பேசுகிறாா் ராகுல் - பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT