கடலூர்

தேசத் தலைவர்கள் குறித்த சிறப்பு ஓவியக் கண்காட்சி

DIN

கடலூர் அரசு அருங்காட்சியகத்தில் தேசத் தலைவர்கள் குறித்த சிறப்பு ஓவியக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
கடலூர் அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசத் தலைவர்களின் ஓவியங்கள் தொடர்பான சிறப்புக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, புதன்கிழமை தொடங்கிய இந்தக் கண்காட்சியை கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் ப.குமரன் தொடக்கி வைத்து, மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். 
இதில், நாட்டின் சுதந்திரத்துக்கும், பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டவர்களைப் போற்றிடும் வகையிலும் அவர்களது ஓவியங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இந்தக் கண்காட்சியை மாணவ, மாணவிகள் இலவசமாகப் பார்வையிடும் வகையில், வருகிற  22 -ஆம் தேதி வரை நடைபெறும் என்று அருங்காட்சியக காப்பாட்சியர் செ.ஜெயரத்னா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT