கடலூர்

பள்ளி வாகனம் ஓட்டுபவர்கள் விதிமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்: போக்குவரத்து போலீஸார் அறிவுரை

DIN


பள்ளி வாகனங்களை ஓட்டுபவர்கள் சாலை விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என போக்குவரத்து போலீஸார் அறிவுரை வழங்கினர். 
பள்ளிகள், கல்லூரிகள் தொடங்கியுள்ள நிலையில், கல்வி நிறுவனங்களுக்கு வாகனங்களை இயக்குபவர்களுக்கான ஒழுக்கக் கட்டுப்பாடுகள் குறித்து விளக்குவதற்காக கடலூர் போக்குவரத்துக் காவல் துறை சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக சுமார் 50 தனியார் வாகனங்கள் மஞ்சக்குப்பம் மைதானத்துக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டு அவற்றின் சான்றிதழ்கள், ஓட்டுநர்களின் சான்றிதழ்களை போக்குவரத்து காவல் ஆய்வாளர் அப்பாண்டை ராஜ், காவல் உதவி ஆய்வாளர்கள் சதீஷ்குமார், மகாலிங்கம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் அவர்கள் ஓட்டுநர்களிடம் கூறியதாவது: சாலை விதிகளை முறையாகக் கடைப்பிடித்து வாகனங்களை இயக்க வேண்டும். வாகனத்தில் மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்வதால் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தியிருப்பதுடன், சீரான வேகத்தில் செல்ல வேண்டும். ஒழுங்கீமான செயல்களில் ஈடுபடுவதோ, வாகனத்தில் சமுதாயத்துக்கு கேடான பாடல்களையோ ஒலிபரப்புவதோ கூடாது என அறிவுரை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம் அருகே லாரி ஓட்டுநர் குத்திக் கொலை

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன் கைது

போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் - யுஜிசி வெளியீடு!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலி

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் புகார்- சிபிசிஐடி வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT