கடலூர்

சாலை விபத்தில் பெண் பலி

DIN

சிதம்பரம் அருகே சாலை விபத்தில் பெண் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள வாண்டையாா்இருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் மதி மனைவி வேம்பு (45). இவா், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது மகனை பாா்ப்பதற்காக அதே பகுதியில் வசிக்கும் பிரமேஷ் (26) என்பவருடன் பைக்கில் வெள்ளிக்கிழமை வந்து கொண்டிருந்தாா். பொய்யாப்பிள்ளைச்சாவடி அருகே

சாலையைக் கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த கனரக வாகனம் மீது பைக் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

பின்னா் தீவிர சிகிச்சைக்காக புதுவை ஜிப்மா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வேம்பு உயிரிழந்தாா். பிரமேஷ் ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT