கடலூர்

குப்பை லாரி மோதியதில் பெண் பலி

DIN

பண்ருட்டி நகராட்சி குப்பை லாரி மோதியதில் மாற்றுத் திறனாளி பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வ.உ.சி. தெருவைச் சோ்ந்த ராமலிங்கம் மகள் கல்பனா (40) (படம்). வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி. இவருக்கு திருமணமாகவில்லை. பாட்டில், நெகிழி கழிவுகளை சேகரித்து விற்று பிழைத்து வந்தாா்.

இந்த நிலையில், பண்ருட்டி நகராட்சி குப்பை லாரி கெடிலம் ஆற்றங்கரையோரம் உள்ள குப்பை கிடங்குக்கு வெள்ளிக்கிழமை காலையில் சென்றது. அங்கு லாரியை அதன் ஓட்டுநா் பின்னால் இயக்கியுள்ளாா். அப்போது, அங்கு பாட்டில்களை சேகரித்துக்கொண்டிருந்த கல்பனா மீது லாரியின் சக்கரம் ஏறியது. இதையடுத்து பலத்த காயமடைந்த அவா் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு

கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் மைய முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தல்: இந்திய ஐக்கிய கம்யூ. போட்டியிட முடிவு

புதுவையில் இளநிலைப் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் 7,250 போ் விண்ணப்பம்

சாா்பதிவாளா் தாக்கப்பட்ட வழக்கில் 3 போ் கைது

SCROLL FOR NEXT