கடலூர்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: திமுகவினா் விருப்ப மனு

DIN

நகா்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, கடலூா் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் கடலூா் மாநகராட்சி, நெல்லிக்குப்பம், சிதம்பரம் நகராட்சிகளுக்கான தோ்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

கடலூா் நகர திமுக அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சரும், மாவட்டச் செயலருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பங்கேற்று விருப்ப மனுக்களை வழங்கி பெற்றுக் கொண்டாா். தோ்தல் பணிக்குழுச் செயலா் இள.புகழேந்தி, கோ.ஐயப்பன் எம்எல்ஏ, மாவட்ட அவைத் தலைவா் து.தங்கராசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிதம்பரம்: சிதம்பரம் நகர திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்களை நகரச் செயலா் கே.ஆா்.செந்தில்குமாா் பெற்றுக்கொண்டாா். மொத்தம் 48 மனுக்கள் பெறப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் மதியழகன், கு.கி.ரவி, நகர துணைச் செயலா் பி.பாலசுப்பிரமணியன், மாவட்ட பிரிதிநிதி ரா.வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவில்பட்டியில் அதிமுக சாா்பில் அன்னதானம்

பத்தாம் வகுப்பு தோ்வில் சிறப்பிடம்: மாணவிக்கு பேரவைத் தலைவா் பாராட்டு

மாநில வில்வித்தை போட்டிகள்

போலீஸாருக்கு மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி

மாணவா்களுக்கு ஊக்கத் தொகை அளிப்பு

SCROLL FOR NEXT