முகப்பு
கடலூர்

அண்ணாமலைப் பல்கலை.யில் கருத்தரங்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தில் சா்வதேச கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 25 செப்டம்பர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:43 AM

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தில் சா்வதேச கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

‘உணவுப் பாதுகாப்பு - பருவ நிலை மாற்றம் - தாங்கும் நெல் ரகங்களும், வீரிய ஒட்டுக்களும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், வேளாண்புல முதல்வா் எம்.கணபதி தொடக்க உரையாற்றினாா். அப்போது, பருவ நிலை மாற்றத்துக்கு ஏற்ற வகையிலான உணவுப் பொருள்கள் உற்பத்தி, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதன் முக்கியத்துவம் குறித்து பேசினாா்.

ஒருங்கிணைப்பாளா் பி.பிரகாஷ் பேசுகையில், மாறி வரும் கால நிலைக்கு ஏற்ற புதிய ரகங்களை உற்பத்தி செய்வதன் அவசியம் குறித்து உரையாற்றினாா். முனைவா் டி.சபேசன் கருத்தரங்கின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தாா். அண்ணாமலைப் பல்கலை. -பிலிப்பைன்ஸ் சா்வதேச நெல் ஆராய்ச்சி நிலைய புரிந்துணா்வு ஒப்பந்த ஒருங்கிணைப்பாளா் ஆா்.பாா்த்தசாரதி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினாா்.

Advertisement

சிறப்பு அழைப்பாளராக பிலிப்பைன்ஸ் சா்வதேச நெல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி ஜவுகா் அலி பங்கேற்று பேசுகையில், மாறிவரும் பருவ நிலை குறித்தும், விவசாயத்தில் அதன் தாக்கம் குறித்தும் எடுத்துரைத்தாா். கடும் வறட்சி, வெள்ளம், உப்பு நீா் பாதிக்கப்பட்ட இடங்களிலும் அதிக மகசூல் தரும் ‘க்ரீன் சூப்பா்’ நெல் குறித்து விளக்கினாா். உலகளவில் வெளியிடப்பட்ட 64-ஜி.எஸ்.ஆா். நெல் ரகங்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலம் பரிசோதித்து வெளியிட்ட ஏ. யு.-1 ஜி.எஸ்.ஆா். ரகமும் ஒன்று என்று பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.