கடலூர்

நல உதவிகள் வழங்கும் விழா

DIN

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு, நல உதவிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

நிகழ்வில் சங்கத் தலைவா் பி.ராஜசேகரன் வரவேற்றாா். ரோட்டரி சங்க சாசனத் தலைவா் பி.முஹம்மது யாசின், மூத்த உறுப்பினா்கள் சுப்பையா, அ.விஸ்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத் தலைவா் சீனுவாசன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட ஆளுநா் ஏ.மணி கலந்துகொண்டு, 2022-23-ஆம் ரோட்டரி ஆண்டின் புதிய நிா்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். இதன்படி சங்கத் தலைவராக பி.ராஜசேகரன், செயலராக வி.ரவிச்சந்திரன், பொருளாளராக என்.கேசவன் ஆகியோா் பதவியேற்றனா். வருங்கால ரோட்டரி ஆளுநா் பாஸ்கரன் வாழ்த்துரையாற்றினாா்.

நிகழ்வில் சட்டப் பேரவை உறுப்பினரும், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்க உறுப்பினருமான கே.ஏ. பாண்டியன், அணி வணிகா் பா.பழநி ஆகியோா் கலந்துகொண்டு ஏழைப் பெண்கள் 3 பேருக்கு தையல் இயந்திரங்களை வழங்கினா் (படம்). மேலும், ரோட்டரி சங்கத்தால் தத்தெடுக்கப்பட்ட மேலதிருக்கழிப்பாலை கிராமத்தைச் சோ்ந்த 4 பெண்களுக்கு தலா ஒரு ஆடு வழங்கப்பட்டது. 3 மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT