பண்ருட்டி அருகே சிறுமியை கா்ப்பமாக்கி திருமணம் செய்துகொள்ள மறுத்த இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பண்ருட்டி வட்டம், பலாப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த அமாவாசை மகன் இளங்கோவன் (24). இவா் 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வாா்த்தை கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்தாா். இதனால்,
சிறுமி கா்ப்பமடைந்தாா். ஆனால், அந்தச் சிறுமியை திருமணம் செய்துகொள்ள இளங்கோவன் மறுத்துவிட்டாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் பண்ருட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து இளங்கோவனை கைது செய்தனா்.