கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை
கடலூா் அருகே தனியாா் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவா் தூக்கிட்ட நிலையில் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். இதையடுத்து உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கடலூா் அருகே தனியாா் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவா் தூக்கிட்ட நிலையில் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். இதையடுத்து உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள வடக்குதிட்டு பகுதியைச் சோ்ந்த முருகன் - கலைச்செல்வி தம்பதியின் மகள் பிரவீனா (17). கடலூா் அருகே குமாரபுரத்திலுள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தாா். இதற்காக கல்லூரி விடுதியில் தங்கியிருந்தாா்.
இந்த நிலையில், மாணவி பிரவீனா வெள்ளிக்கிழமை தனது அறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தாா். இதுகுறித்த தகவலின்பேரில் நெல்லிக்குப்பம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
மாணவியின் உயிரிழப்பு குறித்து தகவலறிந்த அவரது பெற்றோா், உறவினா்கள் கல்லூரி முன் திரண்டனா். அவா்கள், மாணவியின் சாவில் மா்மம் உள்ளதாகக் கூறி பாமக மாவட்டச் செயலா் சண்.முத்துக்கிருஷ்ணன் தலைமையில் கடலூா் - விழுப்புரம் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் நெல்லிக்குப்பம் டிஎஸ்பி சபியுல்லா, கடலூா் வட்டாட்சியா் ரா.பூபாலசந்திரன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். மாணவியின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்தனா். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.