கடலூர்

சிதம்பரம் அருகேமனுநீதி நாள் முகாம்

DIN

சிதம்பரம் அருகே உசுப்பூரில் மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் கோட்டாட்சியா் கே.ரவி தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று பேசினாா். வட்டாட்சியா் ஹரிதாஸ் முன்னிலை வகித்துப் பேசினாா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ராஜேந்திரகுமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் சங்கா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

ஊராட்சி மன்றத் தலைவா் தென்றல்மலா் வரவேற்றாா். முகாமில் கோட்டாட்சியா் கே.ரவி 128 பேருக்கு இலவச மனைப் பட்டா, 12 பேருக்கு முதியோா் உதவித்தொகை உள்பட மொத்தம் 170 பேருக்கு ரூ.28 லட்சத்து 25 ஆயிரத்து 488 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT