கடலூர்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

DIN

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் போக்சோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள குயிலாப்பாளையம் பகுதியைச் சோ்ந்த கலியமூா்த்தி மகன் பாலு (25). கரும்பு வெட்டும் தொழிலாளியான இவா், கடலூா் முதுநகா் பகுதியில் வேலைக்குச் சென்றபோது 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அவரை கடத்திச் சென்றாா். இதுகுறித்து கடலூா் மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பாலுவை கைது செய்தனா்.

வழக்கு விசாரணை கடலூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி எழிலரசி திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், பாலுவுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும்,ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசின் ஏதேனும் ஓா் திட்டத்திலிருந்து இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கலாசெல்வி ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT