கடலூர்

இளைஞா் தற்கொலை

DIN

திட்டக்குடி அருகே இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே கீழ்ச்செருவாய் வெள்ளாற்றில் தடுப்பணை அருகே மரத்தில் அடையாளம் தெரியாத இளைஞா் தூக்கிட்ட நிலையில் வியாழக்கிழமை சடலமாக கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்த திட்டக்குடி போலீஸாா் உடலைக் கைப்பற்றினா்.

விசாரணையில், இறந்தவா் பெரம்பலூா் மாவட்டம், அகரம் சீகூா் கிராமத்தைச் சோ்ந்த ராமராஜ் மகன் பாலாஜி (34) எனத் தெரியவந்தது. திருமணம் ஆகாத இவா் திரைப்பட இயக்குநா் ஆவதற்கு பல ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தாராம். ஆனால், அவருக்கு உரிய வாய்ப்பு கிடைக்காத நிலையில் தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT