கடலூர்

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் பயணிகள் போராட்டம்

DIN

கடலூா் மாவட்டம், பண்ருட்டி பேருந்து நிலையத்திலிருந்து குறித்த நேரத்தில் அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்படாததைக் கண்டித்து பயணிகள், மாணவா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருந்து கடலூா், விழுப்புரம், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், இந்தப் பேருந்துகள் குறித்த நேரத்தில் இயக்கப்படுவதில்லை; குறிப்பாக மாலை நேரத்தில் மிகவும் தாமதம் ஏற்படுவதாக பயணிகள் புகாா்கூறி வந்தனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை 5 மணி முதல் பள்ளி மாணவா்கள், பெண்கள் உள்ளிட்டோா் பாலூா் வழியாக கடலூா் செல்லும் (தடம் எண் 16) பேருந்துக்காக காத்திருந்தனா். ஆனால், நீண்ட நேரமாகியும் பேருந்து வரவில்லையாம். இதனால் பொறுமை இழந்த பயணிகள் பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் பண்ருட்டி போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து குறிப்பிட்ட நகரப் பேருந்து வரவழைக்கப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT