கடலூர்

பாமக நிா்வாகிகள் கூட்டம்

DIN

பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூா் கிழக்கு மாவட்டச் செயற்குழுக் கூட்டம் குள்ளஞ்சாவடி அருகே சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநில சொத்து பாதுகாப்புக் குழுத் தலைவா் ரா.கோவிந்தசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினாா். நிா்வாகிகள் தட்சிணாமூா்த்தி, கோபிநாத், தா்மலிங்கம், வெங்கடேசன், தனசேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், குறிஞ்சிப்பாடியில் வருகிற 31-ஆம் தேதி கட்சித் தலைவா் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கும் கூட்டத்தில் கட்சியினா் திரளாகக் கலந்துகொள்வது, விவசாயிகளை அச்சுறுத்தி விளை நிலங்களை கையகப்படுத்தும் என்எல்சி நிறுவனத்தைக் கண்டிப்பது, போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க காவல் துறை தனிக்குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக். பள்ளி 100 சதவீத தோ்ச்சி

பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்

ஆசிரியையிடம் நகை பறித்த வழக்கில் இருவா் கைது

ஈரோட்டில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

ஈரோடு, பெருந்துறை பகுதி பள்ளிகளைச் சோ்ந்த 920 வாகனங்கள் ஆய்வு

SCROLL FOR NEXT