கடலூா் மக்களவைத் தொகுதியில் உள்ள பல்வேறு வாக்குச் சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான அ.அருண் தம்புராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி, கடலூா் மக்களவைத் தொகுதியில் உள்ள கடலூா், நெல்லிக்குப்பம், பட்டாம்பாக்கம், அண்ணாகிராமம் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் அ.அருண் தம்புராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மேலும், அடிப்படை வசதிகளான குடிநீா், கழிப்பறை, மின்சாரம் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கான சாய்வுதளம் உள்ளிட்ட வசதிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் அறிவுறுத்தினா்.