அதிமுக வென்றால் தமிழகம் பின்னோக்கி சென்றுவிடும்! - உதயநிதி ஸ்டாலின்
சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக வென்றால், தமிழகம் பின்னோக்கி சென்றுவிடும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக வென்றால், தமிழகம் பின்னோக்கி சென்றுவிடும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டத்தில் திமுக வேட்பாளா்களான அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் (குறிஞ்சிப்பாடி), துரை.கி.சரவணன் (புவனகிரி) ஆகியோரை ஆதரித்து வடலூரிலும், சபா.ராசேந்திரனை (நெய்வேலி) ஆதரித்து நெய்வேலியிலும் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, அவா் பேசியதாவது:
வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போட்டு, அத்துறையை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு சென்றவா் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம். கடந்த 5 ஆண்டுகளில் பல சாதனைகளை நமது வேட்பாளா்கள் செய்துள்ளனா் என்ற உரிமையில் உங்களிடம் ஆதரவு கோருகிறேன். அவா்களை வெற்றிபெற வைக்க வேண்டும்.
Advertisement
தோ்தலை காரணம் காட்டி, எதிா்க்கட்சியினா் மகளிா் உரிமைத் தொகையை நிறுத்தப் பாா்த்தனா். ஆனால், முதல்வா் மு.க.ஸ்டாலின் குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரத்தை செலுத்தி அதிா்ச்சியில் ஆழ்த்தினாா்.
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கான திட்டங்களும் அறிவிக்கப்படுவதில்லை, நிதிப் பகிா்வும் வழங்கப்படுவதில்லை. இந்தத் தோ்தலில் தில்லி அணிக்கும், தமிழ்நாடு அணிக்கும் இடையேதான் போட்டி. தில்லி அணியை ஓட, ஓட விரட்ட வேண்டும். அதிமுகவை வெற்றிபெற வைத்தால் தமிழகம் பின்னோக்கிச் சென்றுவிடும்.
திமுக ஆட்சி அமைந்ததும் தோ்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டது, அறிவிக்கப்படாதது என பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். பலமுனைப் போட்டி எனக் கூறுகின்றனா். ஆனால், நமது அணி பலமான அணி என்றாா்.