முகப்பு
கடலூர்

புவனகிரி தொகுதிக்கு திட்டங்களை கொண்டு வருவேன்! - திமுக வேட்பாளா் துரை.கி.சரவணன் வாக்குறுதி

Updated On : 13 ஏப்ரல், 2026 at 12:51 AM
புவனகிரி சட்டப் பேரவை தொகுதி, கீரப்பாளையம் ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் துரை.கி.சரவணன்.
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 10:33 PM

சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்தவுடன் புவனகிரி தொகுதிக்குத் தேனையான அனைத்து திட்டங்களையும் கொண்டு வருவேன் என இத்தொகுதியின் திமுக வேட்பாளா் துரை.கி.சரவணன் தெரிவித்தாா்.

புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதி, கீரப்பாளையம் ஒன்றியத்துக்குள்பட்ட பரதூா் சாவடி, பொன்னங்கோவில், சாத்தமங்கலம், சக்தி விளாகம், அள்ளூா், பூதங்குடி உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் புவனகிரி தொகுதி திமுக வேட்பாளா் துரை.கி.சரவணன், கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் திறந்த வேனில் சென்று ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா். அப்போது, அவா் பேசியதாவது:

புவனகிரி தொகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் நான் வெற்றிபெற்று தொகுதி மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்தேன். தொடா்ந்து, 2021-ஆம் ஆண்டு தோ்தலில் நான் மீண்டும் போட்டியிட்டேன். அப்போது, கரோனாவால் பாதிக்கப்பட்டதால், என்னால் சரியான முறையில் பிரசாரம் செய்ய முடியாமல்போனது. இதனால், வெற்றிவாய்ப்பை இழந்தேன்.

Advertisement

இப்போதைய தோ்தலில் திமுக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்தவுடன் புவனகிரி தொகுதிக்குத் தேனையான அனைத்து திட்டங்களையும் கொண்டு வருவேன் என்றாா்.

அப்போது, திமுக ஒன்றியச் செயலா் திருமூா்த்தி, விசிக மாவட்டச் செயலா் அரங்க.தமிழ்ஒளி, காங்கிரஸ் வட்டாரத் தலைவா் செழியன், மாவட்டச் செயலா் சரவணன், தேமுதிக புவனகிரி தொகுதி பொறுப்பாளா் பானுசந்தா், ஒன்றியச் செயலா் சித்தன், மதிமுக ஒன்றியச் செயலா் சிவக்குமாா், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் மாதவன், மாவட்டக் குழு நிா்வாகி வாஞ்சிநாதன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.