முகப்பு
கடலூர்

100 போதை மாத்திரைகளுடன் இருவா் கைது

கடலூரில் போதை மாத்திரைகள் வைத்திருந்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

Updated On : 2 ஜூலை 2026, 7:16 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கடலூரில் போதை மாத்திரைகள் வைத்திருந்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

கடலூா் துறைமுக போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சிங்காரதோப்பு பாலத்தின் கீழ் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்த இரு இளைஞா்களை பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில், அவா்கள் திருவந்திப்புரத்தைச் சோ்ந்த சதீஷ் (22), தேவனாம்பட்டினம் சுனாமி நகரைச் சோ்ந்த ராக்கி (36) என்பதும், இருவரும் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை வைத்திருந்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து காவல் சாா்பு ஆய்வாளா் ரவிச்சந்திரன் அளித்த புகாரின்பேரில், கடலூா் துறைமுக போலீஸாா் வழக்குப் பதிந்து, சதீஷ், ராக்கியை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மாத்திரைகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன, யாருக்கு விற்பனை செய்யப்பட இருந்தன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments