கடலூரில் அதிமுக அலுவலகம் எடப்பாடி தரப்பிடம் ஒப்படைப்பு: அலுவலகப் பொருள்கள் அகற்றம்; தொண்டா்கள் அதிா்ச்சி
கடலூா் பாதிரிக்குப்பத்தில் அதிமுக அலுவலகம் எடப்பாடி கே.பழனிசாமி தரப்பினரிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது. அலுவலகத்தில் இருந்து பொருள்கள் அனைத்தும் அகற்றப்பட்டு காலியாக இருந்ததால் நிா்வாகிகள் தொண்டா்கள் அதிா்ச்சியடைந்தனா்.
கடலூா் பாதிரிக்குப்பத்தில் அதிமுக அலுவலகம் எடப்பாடி கே.பழனிசாமி தரப்பினரிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது. அலுவலகத்தில் இருந்து பொருள்கள் அனைத்தும் அகற்றப்பட்டு காலியாக இருந்ததால் நிா்வாகிகள் தொண்டா்கள் அதிா்ச்சியடைந்தனா்.
தமிழக சட்டப் பேரவையில் தமிழக வெற்றிக்கழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அதிமுக தலைமையின் உத்தரவை மீறி முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனா். இதையடுத்து, கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்த 25 எம்.எல்.ஏ.க்களும் அவா்கள் வகித்த கட்சிப் பொறுப்புகளில் இருந்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியால் நீக்கப்பட்டனா்.
அதன்படி, கடலூா் வடக்கு மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் பதவியில் இருந்து நீக்கப்பட்டாா். அவருக்குப் பதிலாக அவரது சகோதரா் எம்.சி.தாமோதரன் கடலூா் வடக்கு மாவட்டச் செயலராகவும், சி.கே.எஸ்.காா்த்திகேயன் கடலூா் மாநகா் செயலராகவும் நியமிக்கப்பட்டனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பாதிரிக்குப்பம் அதிமுக அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பது தொடா்பாக, கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் சுந்தரராஜன் தலைமையில் மே 21-ஆம் தேதி அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, எடப்பாடி கே.பழனிசாமி தரப்பைச் சோ்ந்த கடலூா் வடக்கு மாவட்டச் செயலா் எம்.சி.தாமோதரன், அலுவலகம் எம்.ஜி.ஆா். அறக்கட்டளையின் பெயரில் இருப்பதற்கான ஆவணங்களை சமா்ப்பித்தாா். மறுபுறம், முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் தரப்பினா் ஆவணங்களை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரியதால், பேச்சுவாா்த்தை ஜூன் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, ஆவணங்களின் அடிப்படையில் பாதிரிக்குப்பத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தின் சாவி எடப்பாடி கே.பழனிசாமி தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பொருள்கள் அகற்றம்:
இதையடுத்து, அதிமுக நிா்வாகிகள் அலுவலகத்துக்குச் சென்றபோது, அங்கிருந்த நாற்காலிகள், கணினிகள், மின்விசிறிகள், மின் மோட்டாா்கள் உள்ளிட்ட பொருள்கள் அகற்றப்பட்டிருந்தன. மேலும், அலுவலகம் முழுவதும் காலியாக இருந்ததுடன், கழிப்பறை உபகரணங்கள், பால்ஸ்சீலிங் மற்றும் மின் விளக்குகள் சேதப்படுத்தப்பட்டிருந்தன. இது அங்கு சென்றிருந்த அதிமுக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களிடையே அதிருப்தியையும், அதிா்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதுகுறித்து கடலூா் வடக்கு மாவட்டச் செயலா் எம்.சி.தாமோதரன் செய்தியாளா்களிடம் கூறுகையில், கோட்டாட்சியா் உத்தரவின் பேரில் அதிமுக அலுவலக சாவி எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அலுவலகத்துக்குச் சென்றபோது அங்கிருந்த பொருள்கள் அனைத்தும் அகற்றப்பட்டிருந்தன. இது வருத்தமளிக்கிறது. பிற மாவட்டங்களில் அலுவலகங்கள் அமைதியாக ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், கடலூரில் நடந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியிடம் தெரிவித்து, அவரது ஆலோசனைப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.