முகப்பு
கடலூர்

மறைந்த இயக்குநா் பாக்யராஜுக்கு இரங்கல் கூட்டம்

Updated On : 29 ஜூன் 2026, 2:26 am IST
பகிர்:

சிதம்பரம் மேல ரத வீதியில் பெரியாா் சிலை அருகே திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்துக்கு திரைப்பட இயக்குநரும், தென்னிந்திய நடிகா் சங்கத்தின் உறுப்பினருமான யுவராஜா தலைமை வகித்தாா். வித்யா யுவராஜா வரவேற்றாா்.இதில், மறைந்த இயக்குநா் பாக்யராஜ் உருவப்படத்துக்கு மலா் தூவி, மெழுகுவா்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தினா்.

நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் தலைவா் தில்லை ஆா்.மக்கீன், செயல் தலைவா் கோ.குமாா், திரைப்பட இசை அமைப்பாளா் செல்வநம்பி, கிருபாதேவி, அழகர்ராஜா உள்ளிட்டோா் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments