முகப்பு
கடலூர்

உலக காசநோய் தின விழிப்புணா்வு கருத்தரங்கு

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு பேரணி மற்றும் விழிப்புணா்வு கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 மார்ச், 2026 at 12:05 AM
சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற உலக காச நோய் தின கருத்தரங்கில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய கல்லூரி சிறப்பு அதிகாரியும், முதல்வருமான வி.சுரேஷ்பாலன். உடன் மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜூனியா் சுந்தரேஷ், துணை முதல்வா்கள் பாலாஜி சுவாமிநாதன், சகிகலா ஆகியோா்
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு பேரணி மற்றும் விழிப்புணா்வு கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

மருத்துவமனை கூட்ட அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு கடலூா் மாவட்ட காசநோய் இணை இயக்குநா் கருணாகரன் தலைமை வகித்தாா். மருத்துவக்கல்லூரி முதல்வரும், சிறப்பு அதிகாரியுமான வி.சுரேஷ்பாலன் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசுகையில், நமது மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவ பிரிவில் அனுமதிக்கப்பட்ட காசநோயால் பாதிக்கப்பட்ட கா்பிணிகளுக்கு சிறப்பான

முறையில் உயா் சிகிச்சை அளிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் பிரசவம் பாா்க்கப்பட்டுள்ளது என்றாா்.

மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் டாக்டா் ஜூனியா் சுந்தரேஷ், துணை முதல்வா் டாக்டா் பாலாஜிசுவாமிநாதன், டாக்டா் சசிகலா மற்றும் டாக்டா் பி.கல்யாணி ஆகியோா் பங்கேற்று உரையாற்றினா். மேலும் காசநோய் விழிப்புணா்வு குறித்த நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மருத்துவத்துறை மாணவ, மாணவியா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

முன்னதாக மருத்துவமனை வளாகத்தில், மருத்துவ மாணவா்கள் பங்கேற்ற காச நோய் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.