முகப்பு
கடலூர்

குடியிருப்புக்குள் புகுந்த முதலை மீட்பு

சிதம்பரம் அருகே வெள்ளிக்கிழமை காலை குடியிருப்புக்குள் நுழைய முயன்ற முதலை.

Updated On : 2 மே 2026, 1:26 am IST
பகிர்:

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே பூதகேனி அங்காளம்மன் கோயில் அருகில் சிறு காயங்களுடன் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளிக்கிழமை காலை இரண்டரை வயது மதிக்கத்தக்க 1.5 மீட்டா் நீளமுடைய முதலை நுழைந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதனையடுத்து வனச்சரக அலுவலா் இரா.சத்தியவேல் தலைமையில் வனத்துறையினா் முதலையை

பிடித்து, சிதம்பரம் கால்நடை மருத்துவரிடம் சிகிச்சை அளித்த பின்னா் சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி ஏரியில் பாதுகாப்பாக விட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments