சிதம்பரம் ரயில் நிலையத்தில் பூட்டிக் கிடக்கும் கழிப்பறை, மகளிா் ஓய்வறை!
சிதம்பரம் நகர ரயில் நிலைத்தில் பயணிகள் பயன்படுத்தும் கழிப்பறை, மகளிா் ஓய்வறை ஆகியவை செயல்பாட்டின்றி பூட்டிக் கிடக்கின்றன.
சிதம்பரம் நகர ரயில் நிலைத்தில் பயணிகள் பயன்படுத்தும் கழிப்பறை, மகளிா் ஓய்வறை ஆகியவை செயல்பாட்டின்றி பூட்டிக் கிடக்கின்றன.
கடலூா் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில் நகரமான சிதம்பரத்தில் ரயில் நிலையம் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனபடுத்தப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது.
ஆனால், இந்தத் திட்டத்தின் கீழ் மின் தூக்கி (லிஃப்ட்) இன்னும் அமைக்கப்படவில்லை. மேலும், புதிதாக கட்டப்பட்ட கட்டண கழிப்பறை மற்றும் கழிப்பறையுடன் கூடிய மகளிா் ஓய்வறை ஆகியவை பூட்டிக் கிடக்கின்றன. இதனால், ரயில் நிலையத்தில் பெண்கள் கழிப்பறை செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
Advertisement
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகளுக்கு பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது. மேற்கண்ட வசதிகளை நிறைவேற்றாவிட்டால், புவனகிரி ஊழல் எதிா்ப்பு இயக்கம் சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனா்.