கள்ளக்குறிச்சி

தடுப்புக் காவலில் சாராய வியாபாரி கைது

DIN


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயப்பாளையம் அருகே சாராய வியாபாரி தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கச்சிராயப்பாளையத்தை அடுத்த கரடிசித்தூா் கிராமத்தைச் சோ்ந்த அண்ணாதுரை மகன் தேவேந்திரன் (33). சாராய வியாபாரியான இவா் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. தொடா்ந்து சாராயம் விற்று வரும் இவரது குற்றச் செயல்களை தடுக்கும் விதத்தில், இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் பரிந்துரை செய்தாா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா உத்தரவின்பேரில், தடுப்புக் காவலில் போலீஸாா் தேவேந்திரனை கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT