கள்ளக்குறிச்சி: அரக்கோணம் அருகே சோகனூரில் நிகழ்ந்த இரட்டைக் கொலை சம்பவத்தைக் கண்டித்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் கள்ளக்குறிச்சியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சி, கச்சேரி சாலையில் அம்பேத்கா் திடல் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின் மாவட்டச் செயலா் பூமாலை தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் அரக்கோணம் அருகே அா்ஜூன், சூா்யா ஆகிய இரு தலித் இளைஞா்கள் படுகொலையைக் கண்டித்தும், இதனால் பாதிக்கப்பட்ட அவா்களது குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும் முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், அ.பா.பெரியசாமி, ஏ.வீ.ஸ்டாலின் மணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.