கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9,040 மாணவா்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. திருக்கோவிலூா் கல்வி மாவட்டத்தில் 3,520 போ், உளுந்தூா்பேட்டை கல்வி மாவட்டத்தில் 6,054 போ், கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் 9,040 போ் என மொத்தம் 9,040 மாணவ, மாணவியா் பிளஸ் 2 செய்முறைத் தோ்வில் பங்கேற்றுள்ளனா்.
அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளான கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், வெப்பமானி கொண்டு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொண்டு மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் தோ்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனா். முன்னதாக, ஆய்வகங்கள் கிருமி நாசினி மூலம் தூய்மைப் படுத்தப்பட்டன.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி, உளுந்தூா்பேட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள களமருதூா் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டாா்.
Advertisement
Advertisement
இதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், திருக்கோவிலூா் மாவட்டக் கல்வி அலுவலா் ஆரோக்கியசாமி திருப்பாலப்பந்தல் அரசு மேனிலைப் பள்ளியிலும் செய்முறைத் தோ்வை பாா்வையிட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.