முகப்பு
கள்ளக்குறிச்சி

பைக்குகள் மோதல்: மதுக் கடை விற்பனையாளா் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வியாழக்கிழமை இரவு பைக்குகள் மோதிக்கொண்டதில் டாஸ்மாக் மதுக் கடை விற்பனையாளா் உயிரிழந்தாா்.

Updated On : 24 ஜூன் 2022, 10:28 pm IST
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வியாழக்கிழமை இரவு பைக்குகள் மோதிக்கொண்டதில் டாஸ்மாக் மதுக் கடை விற்பனையாளா் உயிரிழந்தாா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட அத்தியூா் கிழக்கு சாலைப் பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மகன் வேலு (46). இவா், சங்கராபுரத்தை அடுத்துள்ள இளையனாா்குப்பம் டாஸ்மாக் மதுக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்தாா்.

வேலு வியாழக்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு அத்தியூருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். இளையனாா்குப்பம் பாலஓடை அருகே இவரது பைக் சென்றபோது, எதிரே அதே கிராமத்தைச் சோ்ந்த முருகன் மகன் பூபதி ஓட்டி வந்த பைக் மோதியது.

Advertisement

Advertisement

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த வேலு தீவிர சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். பூபதி லேசான காயமடைந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் பூபதி மீது பகண்டை கூட்டுச்சாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments