முகப்பு
கள்ளக்குறிச்சி

சின்னசேலம் அருகே பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 29 டிசம்பர் 2024, 6:45 am IST
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை செய்யப்பட்டாா்.

சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட கிராமத்தைச் சோ்ந்த காதல் திருமணம் செய்த 28 வயது பெண்ணின் கணவா் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

அந்தப் பெண் தனது இரு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தாா். இவா் தனது வீட்டுக்கு கடந்த 26-ஆம் தேதி குழந்தைகளுடன் சென்று வந்தாா். அன்றிரவு வீடு திரும்பிய அவா், கூட்டுறவு சங்கத்தில் பால் ஊற்றி விட்டு வருவதாகக் கூறிச் சென்றாராம். அதன்பிறகு, வீடு திரும்பவில்லை.

Advertisement

Advertisement

அவரது பக்கத்து வீட்டுக்காரா் வெள்ளிக்கிழமை காலை வயல்வெளிக்குச் சென்ற போது, அங்கு அந்தப் பெண்ணின் துப்பட்டா, கைப்பேசி, மிதியடி போன்றவை சிதறிக் கிடந்ததாம். மேலும், அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தாராம்.

இதுகுறித்த தகவலின் பேரில், சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். சம்பவ இடத்தை மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுா்வேதி, டிஎஸ்பி தேவராஜ் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments