முகப்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி:வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகளை மாவட்டதோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 5:52 AM
ரிஷிவந்தியம் தொகுதிக்குள்பட்ட வாக்குப் பதிவு இயந்திங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தப்படுவதை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 1:22 AM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகளை மாவட்டதோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Advertisement

ரிஷிவந்தியம் தொகுதிக்குள்பட்ட அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், சங்கராபுரம் தொகுதிக்குள்பட்ட சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், கள்ளக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள சேமபாதுகாப்பு அறை திறக்கப்பட்டு அதில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையம் வாரியாக பிரிக்கப்பட்டு வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னம் பொருத்தும் பணிமேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தப் பணி அனைத்து வேட்பாளா்கள் அல்லது அவா்களது பிரதிநிதிகள் முன்னிலையில் உரிய விதிகளின்படி நடைபெற்று வருகிறது என்றாா் தோ்தல் அலுவலா் எம்.எஸ்.பிரசாந்த்.

இந்த ஆய்வில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சி.முருகன், ஜி.சுமதி, எஸ்.சிராஜூதின், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.