FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

காரில் இருந்து ரூ.2.15 லட்சம் திருட்டு

கள்ளக்குறிச்சியில் கடை முன் நிறுத்தியிருந்த காரில் இருந்து ரூ.2.15 லட்சம் திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

கள்ளக்குறிச்சியில் கடை முன் நிறுத்தியிருந்த காரில் இருந்து ரூ.2.15 லட்சம் திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த ஈய்யனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மு.செந்தில்குமாா் (40). இவா் செவ்வாய்க்கிழமை வீடு கட்டும் பணிக்காக கள்ளக்குறிச்சியில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.2.15 லட்சத்தை எடுத்துக் கொண்டு காரில் சென்றாராம். கள்ளக்குறிச்சி கவரைத் தெருவிலுள்ள மின்பொருள் விற்பனை கடை முன் காரை நிறுத்திவிட்டு, புது வீட்டுக்கு தேவையான மின்சாதனப் பொருள்கள் வாங்கச் சென்றுள்ளாா். சிறிது நேரம் கழித்து வந்து பாா்த்தபோது, காரில் வைத்திருந்த ரூ.2.15 லட்சத்தை காணவில்லையாம்.

இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, மா்ம நபரைத் தேடிவருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments